சம்பளம் வழங்கப்படாததால் 1000 ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்கப்படாததால் 1,000க்கும் அதிகமான ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சம்பளம் வழங்கப்படாததால் 1,000க்கும் அதிகமான ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
விமானிகளுக்குக் கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று அந்நிறுவனத்தின் விமானிகள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
நிதிப் பிரச்சினையில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன்சுமை 1.2 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்று கூறப்பட்டது.
மீட்பு ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்ட 217 மில்லியன் டாலர் கடன்தொகையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்னும் பெறவில்லை.