ரொஹிஞ்சா கிளர்ச்சியாளர்களோடு சமரசம் பேசக் கொள்கை இல்லை: மியன்மார் அரசாங்கம்
மியன்மாரில் ரொஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் இன்று தொடங்கி ஒரு மாதச் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மனிதாபிமான உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்லும் பணியை எளிதாக்க அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
மியன்மாரில் ரொஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் இன்று தொடங்கி ஒரு மாதச் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மனிதாபிமான உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்லும் பணியை எளிதாக்க அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
ரக்கைன் மாநிலத்தில் தொடரும் வன்செயல்களால் ரொஹிஞ்சா மக்கள் பெரிய அளவில் பக்கத்து நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துவரும் வேளையில் சண்டை நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகக் கடைசி நிலவரப்படி, பயங்கரவாதிகளோடு சண்டை நிறுத்தம் குறித்து சமரசம் பேசக் கொள்கை ஏதும் இல்லை என மியன்மார் அரசாங்கம் கூறியுள்ளது.
அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஸாவ் டே (Zaw Tay) டுவிட்டரில் அதனைத் தெளிவுபடுத்தினார்.