2030ஆம் ஆண்டிற்குள் அனைத்தும் மின்-வாகனங்கள் : இந்தியா
இந்தியாவின் கார் உற்பத்தியாளர்கள் கார்களை மின்மயப்படுத்துவதற்கான திட்டங்களை வரையத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் கார் உற்பத்தியாளர்கள் கார்களை மின்மயப்படுத்துவதற்கான திட்டங்களை வரையத் தொடங்கியுள்ளனர்.
2030ஆம் ஆண்டிற்குள் அனைத்துப் புதிய வாகனங்களும் மின்-வாகனங்களாக இருக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் இலக்கு வகுத்துள்ளது.
நிறுவனங்கள் மின்-கார்களை உற்பத்தி செய்யத் தொடங்காவிட்டால் கொள்கை மாற்றத்தினால் அவை பின்தங்க நேரிடும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தார்.
புதிய கொள்கை, மின்-வாகனங்களுக்கான வரைவுத் திட்டத்தைக் கொண்டிருக்கும். இவ்வாண்டின் இறுதிக்குள் பொதுமக்களுக்கு அது பற்றி அறிவிக்கப்படும்.