இந்தியா:பள்ளி பேருந்து மீது மோதிய ரயில் விபத்து -குறைந்தது 13 பிள்ளைகள் பலி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 13 சிறார் பலியாகிவிட்டனர்.
இந்தியா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 13 சிறார் பலியாகிவிட்டனர்.
10 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆளில்லா ரயில் பாதையைக் கடக்க முயன்ற போது விபத்து நேர்ந்தது.ரயில் மோதியதால் பேருந்து பல மீட்டர் தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது.
10 சிறார் சம்பவ இடத்திலேயே மாண்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் மூவர் உயிரிழந்தனர். மேலும் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் பள்ளத்துக்குள் பாய்ந்தது. அதில் 27 பேர் மாண்டனர். அவர்களில் 23 பேர் சிறார்.
இந்தியாவில் ரயில் விபத்துகளில் சிக்கி ஆண்டுதோறும் 15,000க்கும் அதிகமானோர் பலியாவதாக ஓர் ஆய்வு சொல்கிறது.