Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

லாவோஸ், சிங்கப்பூர் இடையிலான லாவோ ஏர்லைன்ஸ் நேரடி விமானச் சேவை தற்காலிக நிறுத்தம்

லாவோஸ், சிங்கப்பூர் இடையே செயல்படும் லாவோ ஏர்லைன்ஸ் நேரடி விமானச் சேவை இம்மாதம்(மார்ச்) 25ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படும்.

வாசிப்புநேரம் -

லாவோஸ், சிங்கப்பூர் இடையே செயல்படும் லாவோ ஏர்லைன்ஸ் நேரடி விமானச் சேவை இம்மாதம்(மார்ச்) 25ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படும்.

செயல்பாட்டுக் காரணங்களால் நேரடிச் சேவை தற்காலிகமாய் நிறுத்தப்படுவதாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது லாவோ ஏர்லைன்ஸ் நிறுவனம்.

விரைவில் அச்சேவை மீண்டும் தொடங்கப்படுமென்றும் அது குறிப்பிட்டது.
இருநகரங்களுக்கு இடையிலான நேரடி விமானச் சேவை நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம்தான், சிங்கப்பூர்-லாவோஸ் நேரடி விமானச் சேவை மறு-அறிமுகம் செய்யப்பட்டது. பயணிகள் அதிகமானோரை ஈர்க்கும் நோக்கம் கொண்ட, 'Visit Laos Year' என்று இயக்கத்தை இவ்வாண்டு அறிவித்துள்ள நிலையில், அண்மை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே, சந்தையின் தேவையைப் பொறுத்து, லாவோஸுக்கான சேவைகள் அதிகரிக்கப்படுமென, சில்க் ஏர் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, சில்க் ஏர் லாவோஸுக்கான தனது சேவையைத் தொடங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்