புனிதப் பாறையை நிர்வாணமாகத் தழுவிய வெளிநாட்டவர் - சீற்றமடைந்த உள்ளூர்வாசிகள்
உள்ளூர்வாசிகளால் புனிதமாகக் கருதப்படும் கல்லை ஒரு வெளிநாட்டவர் நிர்வாணமாகக் கட்டித் தழுவிப் படமெடுத்திருக்கிறார். இச்செயல் அங்குள்ள உள்ளூர்வாசிகளைச் சீற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர்வாசிகளால் புனிதமாகக் கருதப்படும் கல்லை ஒரு வெளிநாட்டவர் நிர்வாணமாகக் கட்டித் தழுவிப் படமெடுத்திருக்கிறார். இச்செயல் அங்குள்ள உள்ளூர்வாசிகளைச் சீற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்தின் கோ சமுய் தீவில் அமைந்திருக்கும் ஹின் டா பாறையை ஒரு பெண்மணி கட்டித் தழுவும் படங்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன.
அவற்றைக் கண்ட உள்ளூர்வாசிகள், காவல் துறையிடம் புகார் செய்துள்ளனர். வெளிநாட்டவரை அடையாளம் கண்டு அவரைக் கைதுசெய்யுமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
ஹின் டா, ஹின் யாய் நினைவிடத்தில் தங்கள் மூதாதையரின் ஆன்மா இருப்பதாகத் தாய்லந்து மக்கள் நம்புகின்றனர். அதனை வெளிநாட்டவர் அவமதித்து விட்டதாக உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.
இதனால், உடனடியாக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.