கோலாலம்பூர் பள்ளியில் தீ - 25 பேர் மரணம்
மலேசியாவிலுள்ள சமயப் பள்ளி ஒன்றில் தீ மூண்டதில் 25 பேர் வரை மாண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோலாலம்பூர்: மலேசியாவிலுள்ள சமயப் பள்ளி ஒன்றில் தீ மூண்டதில் 25 பேர் வரை மாண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோலாலம்பூரிருள்ள டாத்துக் கெராமாட் பகுதியிலுள்ள அந்தப் பள்ளியில், காலை 5.15 மணிக்குத் தீ பிடித்ததாகக் கூறப்படுகிறது. காலை 5.45 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை கிடைத்த தகவல்கள் படி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 25 பேர் மாண்டதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.