விமானம் தரையிறங்கக் காரணமான பேனா
ஏர் சீனா விமானம் ஒன்று சீனாவின் ஸெங்க்ஸோவ் நகரில் இன்று (ஏப்ரல் 15) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பெய்ச்சிங்: ஏர் சீனா விமானம் ஒன்று சீனாவின் ஸெங்க்ஸோவ் நகரில் இன்று (ஏப்ரல் 15) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பயணி ஒருவர் விமான சிப்பந்தியை பேனாவைக் கொண்டு தாக்கப் போவதாக மிரட்டியதால் விமானம் அவசரமாகத் தறையிறக்கப்பட்டது.
அந்தப் பயணியின் அடையாளம் ஏதும் வெளியிடப்படவில்லை.
பெய்ச்சிங்கில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஹெனான் மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.