வடகொரிய அணுவாயுதங்கள் குறித்து தென்கிழக்காசியா ஆழ்ந்த கவலை
வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களால் அதிகரிக்கும் பதற்றநிலை குறித்து ஆசியானும் ஆஸ்திரேலியாவும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.
சிட்னி: வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களால் அதிகரிக்கும் பதற்றநிலை குறித்து ஆசியானும் ஆஸ்திரேலியாவும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு வடகொரியா உடனடியாகவும் முழுமையாகவும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளும் வலியுறுத்தின.
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கும் வடகொரியாவின் போக்கு வட்டார, அனைத்துலகப் பாதுகாப்பிற்கு மிரட்டலாய் உள்ளதாக அந்நாடுகள் தெரிவித்தன.