இலங்கையில் அவசரநிலை முடிவுக்கு வந்தது
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அந்நாட்டின் அவசரநிலை முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அந்நாட்டின் அவசரநிலை முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தைத் தணிக்க 12 நாட்களுக்கு முன்னர் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கலவரத்தில் மூன்று பேர் மாண்டனர்.
நூற்றுக்கணக்கான கடைகள் சேதமடைந்தன.
பாதுகாப்புச் சூழல் மேம்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவசரநிலையை ரத்துசெய்ய முடிவெடுத்ததாகத் திரு சிறிசேன தெரிவித்தார்.
பெரும்பாலும் கொழும்பின் வடமேற்குப் பகுதியிலுள்ள கண்டி நகரில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
கலவரங்களின் தொடர்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர்.