இந்தியா: வேலையிலிருந்து வெளியேறும் மில்லியன் கணக்கான இந்திய பெண்கள். காரணம்?
இந்தியாவின் ஊழியரணியில் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது
இந்தியாவின் ஊழியரணியில் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
2004ம் ஆண்டிலிருந்து 2005 வரை, 2011லிருந்து 2012வரை, இந்த இரண்டு காலகட்டத்தில் மட்டும், ஊழியரணியைவிட்டு வெளியேறிய பெண்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 20 மில்லியன்.
2004ம் ஆண்டிலிருந்து 2005 வரை, 2009லிருந்து 2010வரை, இந்த காலகட்டத்தில் 24 மில்லயின் ஆண்கள் ஊழியரணியில் சேர்ந்தனர்.
ஏன் இந்த அபார வீழ்ச்சி என்பதைக் கண்டறிய உலக வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது.
விவசாயத்தைத் தாண்டி, பெண்கள் அவர்களுக்கு உகந்த, இன்னும் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவதாக ஆய்வு முடிவுகள் புலப்படுத்தின.
அதற்குக் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோரின் ஆதரவும் புரிந்துணர்வும் அவசியம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.