புற்றுநோயால் மாண்ட அப்பாவிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்களைப் பெற்ற பெண்
புற்றுநோயால் மாண்ட அப்பாவிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றுள்ளார் ஒரு பெண்.
புற்றுநோயால் மாண்ட அப்பாவிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றுள்ளார் ஒரு பெண்.
தைவானைச் சேர்ந்த 14 வயதுப் பெண்ணுக்குத் தம்முடைய தந்தையைப் பற்றி எந்த நினைவும் இல்லை.
அவர் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது தந்தை புற்றுநோயால் மாண்டார்.
இப்போது, தம்முடைய தந்தையைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது மகளுக்கு.
2006-ஆம் ஆண்டில் தந்தை தாம் இறக்கப்போவதை அறிந்தவுடன், மகளுக்கு 19 ஆண்டுகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்களை எழுதி வைத்தார்.
தாயார் அந்தக் கடிதங்களைத் திறந்து படிக்காமல், அவற்றை மகளிடம் ஒப்படைக்க எண்ணினார்.
குறிப்பிட்ட வயதை எட்டும்வரை காத்திருந்த தாயார் அண்மையில் மகளிடம் கடிதங்களைக் கொடுத்தார்.