ஆஸ்திரேலியாவில் அவசரமாய்த் தரையிறங்கிய விமானம் - மன்னிப்புக் கேட்கும் மலேசிய ஏர்லைன்ஸ்
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானம் ஆஸ்திரேலியாவில் அவசரமாய்த் தரையிறங்கியதன் தொடர்பில் நேற்று மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானம் ஆஸ்திரேலியாவில் அவசரமாய்த் தரையிறங்கியதன் தொடர்பில் நேற்று மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
MH 122 விமானத்தின் பயணிகள் அனுபவித்த இன்னலுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை அது தெரிவித்துக்கொண்டது. நேற்று சிட்னியில் இருந்து கோலாலம்பூர் வந்து சேரவேண்டிய அந்த விமானத்தில் 224 பயணிகள் இருந்தனர்.
விமானத்தின் இயந்திரங்களில் ஒன்று பெரும் சத்தைத்தை எழுப்பியதால் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அது திசைதிருப்பப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.