இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே தேடப்படும் மாது
இலங்கைத் தலைநகரமான கொழும்பில் உள்ள திருமண மண்படம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது.
கொழும்பு: இலங்கைத் தலைநகரமான கொழும்பில் உள்ள திருமண மண்படம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது.
அந்த மண்டபத்தின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிகொண்டிருப்பதாக அஞ்சப்படும் ஒரு மாதைக் காப்பாற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஆடவர் ஒருவர் மாண்டதாகவும் 23 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்று இடிந்து விழுந்தபோது அதில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததாக காவல் துறை சொன்னது.
கட்டட இடிபாடுகளுக்கிடையில் ஐந்து மணி நேரமாக சிக்கியிருந்த ஓர் ஆடவர் மீட்கப்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் மாண்டதாகவும் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இரண்டாவது நாளாக தேடல் பணி தொடர்வதாக போலீஸ் பேச்சாளர் சொன்னார்.
கட்டடம் எதனால் இடிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், புதிதாக மேலே கட்டப்பட்ட கட்டுமானத்தின் எடை தாளாமல் மண்டபம் சரிந்திருக்கக் கூடுமெனச் சந்தேகிக்கப்படுகிறது.