Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தேநீர்க் கடைக்குள் மோதிய லாரி - 8 பேர் மரணம்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரி, தேநீர்க் கடைக்குள் மோதியதில்  8 பேர் மாண்டதாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
தேநீர்க் கடைக்குள் மோதிய லாரி - 8 பேர் மரணம்

இந்தியாவிலுள்ள தேநீர்க் கடை ஒன்று. (படம்: Reuters)

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரி, தேநீர்க் கடைக்குள் மோதியதில் 8 பேர் மாண்டதாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

லாரியின் கட்டுப்பாட்டினை ஓட்டுநர் இழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான வட்டாரவாசிகள் திரண்டு காவல்துறையினர் மீது கற்களை வீசியதாகவும் காவல்துறை வாகனத்திற்குத் தீயிட்டதாகவும் அதிகாரிகள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

உலகிலுள்ள வாகனங்களில் ஒரு விழுக்காடு மட்டுமே இந்தியாவில் இருந்தாலும் சாலை விபத்து மரணங்களில் 15 விழுக்காடு இந்தியாவில் நிகழ்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்