மலேசிய விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் காரும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் காரும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். ஜாலான் பொடா கனான்-தெலுக் இந்தான் (Jalan Bota Kanan-Teluk Intan) பகுதியில் நேற்று மாலை சம்பவம் நடந்தது.
48 வயது தாயும் அவரது 19 வயது மகளும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வாகனத்தில் இருந்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆடவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மாண்டார்.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது.