Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: ரகசியக் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 36 பேர் கைது

மலேசியாவில், 'Gang 04' என்ற ரகசியக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 36 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா: ரகசியக் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 36 பேர் கைது

(படம்: Bernama)

மலேசியாவில், 'Gang 04' என்ற ரகசியக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 36 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 20இலிருந்து 60 வயதிற்கு இடைப்பட்ட அந்நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் டத்தோ (Datuk) பட்டத்தைக் கொண்டவர்.

மலேசியாவில் அண்மையில் நிகழ்ந்த தொடர் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேராக் (Perak) மாநிலத் தலைமைக் காவல்துறை அதிகாரி ஹஸ்னான் ஹசான் (Hasnan Hassan) தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக இயங்கி வரும் 'Gang 04' கும்பல், கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார்.

தப்பிச் சென்ற அக்கும்பலின் மேலும்10 உறுப்பினர்களைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்