Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

லொம்போக் நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 387ஆக உயர்ந்தது

லொம்போக் தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மாண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 387ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
லொம்போக் நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 387ஆக உயர்ந்தது

( படம்: AFP/SONNY TUMBELAKA )

லொம்போக் தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மாண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 387ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்லாயிரத்துக்கும் அதிகமானோர் தண்ணீர், உணவு, வீடின்றித் தவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுப் பலர் இன்னமும் அதற்குள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பதால், மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 13,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகள் தொடரும் வேளையில், கூடுதலான மருத்துவ அதிகாரிகளும், அத்தியாவசியப் பொருட்களும் தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்