Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: 5 வயதுச் சிறுவன் மரணம் - பெற்றோர் கைது

பஹாங்கில் 5 வயதுப் பிள்ளை ஒன்று மாண்டதற்குப் பெற்றோரின் துன்புறுத்தல் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
மலேசியா: 5 வயதுச் சிறுவன் மரணம் - பெற்றோர் கைது

கோப்புப் படம்: Channel NewsAsia

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

குவாந்தான்: பஹாங்கில் 5 வயதுப் பிள்ளை ஒன்று மாண்டதற்குப் பெற்றோரின் துன்புறுத்தல் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முகமது ஹாஃபிஸ் ஒத்மான் நயான் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

சிகிச்சை பலனின்றி அவன் உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுவனுக்குப் பாதங்களில் சிகரெட் வடுக்கள், உதட்டில் வெட்டு, நெஞ்சில் காயம் ஆகியவை ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிறுவனின் மாற்றாந்தந்தை அவனை அடித்ததை ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தின் தொடர்பில் சிறுவனின் 25 வயது தாயும் 54 வயது மாற்றாந்தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் அந்தச் சம்பவத்தைக் கொலை என்று வகைப்படுத்தியுள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்