ஆஃப்கானிஸ்தான் தாக்குதல் : இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் குடும்பத்தினர்
கிழக்கு ஆஃப்கானிஸ்தானில், வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளிவாசலின் இடிபாடுகளிலிருந்து தங்கள் அன்புக்குரியோரின் உடல்களைக் கிராமவாசிகள் இன்னமும் தேடி வருகின்றனர்.
கிழக்கு ஆஃப்கானிஸ்தானில், வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளிவாசலின் இடிபாடுகளிலிருந்து தங்கள் அன்புக்குரியோரின் உடல்களைக் கிராமவாசிகள் இன்னமும் தேடி வருகின்றனர்.
நங்கஹார் மாநிலத்தில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 70-க்கு உயர்ந்துள்ளது.
அதில் குறைந்தது 27 பேர் பள்ளிக் குழந்தைகள் என நம்பப்படுகிறது.
தாக்குதல் நடந்த வேளையில் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
பொதுவாக இத்தகைய தாக்குதல்களை நடத்தும் தலிபான் பயங்கரவாத இயக்கம், இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.