Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து - இன்னும் இரண்டு வாரங்களில் தந்தையாகவிருந்த மாண்ட விமானி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் நேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் மாண்டோரில், அதன் விமானிகளும் அடங்குவர்.

வாசிப்புநேரம் -
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து - இன்னும் இரண்டு வாரங்களில் தந்தையாகவிருந்த மாண்ட விமானி

படம்: Reuters / Stringer

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் நேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் மாண்டோரில், அதன் விமானிகளும் அடங்குவர்.

விமானிகளில் ஒருவரான கேப்டன் அக்கிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்று NDTV செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இன்னும் இரண்டு வாரங்களில் அவர் குழந்தையைப் பெற்றெடுக்கவுள்ளார்.

இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டதாக NDTV கூறியது.

2017-ஆம் ஆண்டில் Air India நிறுவனத்தில் சேர்ந்த அவர், இந்தியாவில் முடக்கநிலை அறிவிக்கப்படுவதற்கு முன், கடைசியாகச் சொந்த ஊருக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.

COVID-19 சூழலில் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களைத் திருப்பி அழைத்து வரும் சிறப்புத் திட்டத்தில் திரு.குமார் பங்கேற்றார்.

அவ்வாறு, துபாயிலிருந்து இந்தியர்களை அழைத்து வந்த விமானம், நேற்று விபத்துக்குள்ளானது.

அதில் 18 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்