பொங்கும் அன்பால் பரவசமடைந்தோம்' -ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராய்
பொங்கும் அன்பால் பரவசமடைந்தோம்' -ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராய்
கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து, இந்தியத் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதனையொட்டி, அவர் தமது Instagram பக்கத்தில் பதிவிட்டார்.
"உங்களது பிராத்தனை, அக்கறை, வாழ்த்து அனைத்துக்கும் மிக்க நன்றி. உங்களுடைய பொங்கும் அன்பு எங்களைப் பரவசப்படுத்தியது. நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
அவரும் அவரது மகள் ஆரத்யாவும் ரசிகர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கைகளை இதய வடிவத்தில் வைத்துப் படமெடுத்தனர்.
ஐஸ்வர்யா, அவரது மகள் ஆரத்யா, கணவர் அபிஷேக் பச்சன்,மாமனார் அமிதாப் பச்சன் ஆகியோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது இம்மாத நடுப்பகுதியில் தெரியவந்தது.
ஐஸ்வர்யாவும், அவரது மகளும் நேற்று முன்தினம் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
அபிஷேக் பச்சனும், அமிதாப் பச்சனும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.