Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: நச்சு ரசாயனம் கலந்த மதுவை அருந்தி 4 பேர் மரணம்

ஜொகூரில் நச்சு ரசாயனம் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுவைக் குடித்த 4 ஆடவர்கள் மரணமடைந்தனர்.

வாசிப்புநேரம் -

ஜொகூரில் நச்சு ரசாயனம் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுவைக் குடித்த 4 ஆடவர்கள் மரணமடைந்தனர்.

ஒருவர் பார்வை இழந்தார்.

மாண்டவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர். மூவர் இந்தியா, பாகிஸ்தான், நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் 30 முதல் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது மாண்டனர்.

மெத்தனால் ரசாயனத்தைக் கொண்டு Miludeer எனப்படும்
மதுவகை தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தின் தொடர்பில் காவல்துறை 9 பேரைக் கைது செய்துள்ளது.

அண்மையில் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் நச்சு ரசாயனம் கலந்த மதுவைக் குடித்து 6 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்