Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: மங்கோலியப் பெண்மணியின் கொலை - மறுவிசாரணை தொடங்க தந்தை விருப்பம்

அதன் தொடர்பில், அவர், மலேசியக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: மங்கோலியப் பெண்மணியின் கொலை - மறுவிசாரணை தொடங்க தந்தை விருப்பம்

(படம்: Twitter/Amy Chew)


மலேசியாவில் 12 ஆண்டுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மங்கோலியப் பெண்மணியான அல்தாந்துன்யா ஷரிப்புவின் (Altantuya Shaariibuu) மரணம் குறித்த விசாரணை மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்று அவருடைய தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்பில், அவர், மலேசியக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரியை சந்தித்து அதுபற்றிப் பேசியுள்ளார். இன்று மாலை, அவர் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவையும் சந்திக்கவிருக்கிறார்.

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவர் அந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொலைக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்