இந்தியாவில் 50,000 ஊழியர்களைத் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கும் Amazon நிறுவனம்
இந்தியாவில் Amazon நிறுவனம் சுமார் 50,000 ஊழியர்களைத் தற்காலிக வேலைகளில் சேர்த்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் Amazon நிறுவனம் சுமார் 50,000 ஊழியர்களைத் தற்காலிக வேலைகளில் சேர்த்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் அதிக அளவில் பொருள்கள் இணையம் வழி வாங்கப்படுவதால் தேவையை ஈடுகட்ட தற்காலிகமாக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதாக Amazon தெரிவித்தது.
COVID-19 கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த சுமார் 2 மாதங்களாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் மக்கள் அவர்களுக்குத் தேவையான பல பொருள்களை இணையம் வழி வாங்கத் தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு இடைவெளியை கருத்தில் கொண்டு, ஊழியர்கள் பணிபுரிவர்; ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படும் என்று Amazon கூறியது.
இதற்கு முன்னர் Amazon நிறுவனம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் வேலைகளை உருவாக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தது.