அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மரணம் - நிவாரண முகாம்களில் COVID-19 கிருமி பரவும் அச்சம்
இந்தியாவிலும் பங்களாதேஷிலும் அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மாண்டனர்.
இந்தியாவிலும் பங்களாதேஷிலும் அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மாண்டனர்.
கொல்கத்தாவில், பெரும்பாலான மக்கள் மின்சாரத் தடையினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பாலும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
COVID-19 கிருமித்தொற்றைக் காட்டிலும், சூறாவளி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ கூறியுள்ளார்.
மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அம்பான் சூறாவளி, கரையைக் கடந்தது.
கரையோர கிராமங்களில் வசிக்கும் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
சூறாவளியால் அதிகமானோர் மரணமடைவதை இதன்மூலம் தவிர்க்கமுடிந்தாலும், கூட்டம் நிரம்பிவழியும் நிவாரண முகாம்களில் COVID-19 கிருமி மிக எளிதாகப் பரவக்கூடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.