இந்தியாவில் பாலியல் சித்திரவதையில் சிக்கிமாண்ட மேலும் ஒரு சிறுமி
இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட ஏழு வயதுச் சிறுமியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நேற்றிரவு சிறுமி காணாமல் போனார்.
அவரது உடல் பிறகு ஒரு கட்டுமானத் தளத்தில் இன்று அதிகாலையில் கண்டெடுக்கப்பட்டது.
திருமணத்தின்போது கூடாரத்தை அமைத்துக்கொண்டிருந்த அண்டைவீட்டு நபர் ஒருவர் ஒதுக்குப்புறமான ஓரிடத்திற்குச் சிறுமியை அழைத்துச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அந்த நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.