மலேசியா: விசாரணைக்கு வரும்படி எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது காவல்துறை
மலேசியக் காவல்துறை, விசாரணைக்கு வரும்படி எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பாணை விடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.
மலேசியக் காவல்துறை, விசாரணைக்கு வரும்படி எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பாணை விடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் திரு. அன்வாருக்கு ஆதரவு தந்திருப்பதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் சமூக ஊடகங்களில் பரவிவருவதன் தொடர்பில் அவரிடம் விவரம் பெறுவது அதன் நோக்கம்.
அதன் தொடர்பில் 113 புகார்கள் பதிவானதாகக் காவல்துறை தெரிவித்தது.
திரு. அன்வார் இவ்வாரத் தொடக்கத்தில், மலேசிய மாமன்னரை அரண்மனையில் சந்தித்தார். அப்போது புதிய அரசாங்கம் அமைப்பதன் தொடர்பான ஆதாரங்களை மாமன்னரிடம் சமர்ப்பித்ததாக அவர் கூறியிருந்தார்.