Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நம்பிக்கையை இழக்கவில்லை: திரு. அன்வார் இப்ராஹிம்

கெஅடிலான் கட்சியின் தலைவரான திரு. அன்வார் இப்ராஹிம், தாம் சந்தித்த இன்னல்களையும் தாண்டி தமது நம்பிக்கையை இழக்கமால் இருந்ததாகக் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
நம்பிக்கையை இழக்கவில்லை: திரு. அன்வார் இப்ராஹிம்

(படம்: AFP / MOHD RASFAN)

கெஅடிலான் கட்சியின் தலைவரான திரு. அன்வார் இப்ராஹிம், தாம் சந்தித்த இன்னல்களையும் தாண்டி தமது நம்பிக்கையை இழக்கமால் இருந்ததாகக் கூறியுள்ளார்.

மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல், மலேசியர்களின் விவேகத்தைப் பிரதிபலித்திருக்கிறது என்று அவர் ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

தாம் என்றும் மலேசிய மக்களின் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும், அவர்கள் ஒன்றிணைந்து அதை நிரூபித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியர்கள், தங்களின் விடுதலைக்காகப் போராடும் உலக மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்வேளையில், அவரது மனைவியான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தமது கணவர் அவசரமாகப் பிரதமர் பதவியை ஏற்கமாட்டார் என்று கூறியுள்ளார்.

தற்போது பிரதமர் மகாதீர் முகமதின் கீழ் அரசாங்கம் சுமுகமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

டாக்டர். மகாதீரின் தலைமைத்துவத்தில் புதிய மாற்றங்கள் அறிமுகம் காண வேண்டும் என்று அவர் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்