நான் பிரதமராகப் பொறுப்பேற்றபின் டாக்டர் மகாதீர் மூத்த அரசியல் தலைவராக நீடிப்பார் : அன்வார் இப்ராஹிம்
கெஅடிலான் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராகப் பொறுப்பேற்றபின் டாக்டர் மகாதீர் முகமது மூத்த அரசியல் தலைவராக நீடிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
கெஅடிலான் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராகப் பொறுப்பேற்றபின் டாக்டர் மகாதீர் முகமது மூத்த அரசியல் தலைவராக நீடிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
தேசிய இளையர் மாநாட்டிற்கு இடையே செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
தலைமைத்துவ மாற்றம் தொடர்பான விவரங்களையும் தேதிகளையும் தாமும் டாக்டர் மகாதீரும் கலந்தாலோசித்து முடிவு செய்யப் போவதாகவும் அவர் சொன்னார்.
தங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதாகவும் திரு. அன்வார் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரை அடுத்து திரு. அன்வார் நாட்டின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அவர்களின் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி தேர்தலுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தது.