Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: அன்வார் இப்ராஹிம்

மலேசியாவில், நேற்று கெஅடிலான் கட்சியின் இளையர் கூட்டத்தின்போது குழப்பம் விளைவித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்று திரு. அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

மலேசியாவில், நேற்று கெஅடிலான் கட்சியின் இளையர் கூட்டத்தின்போது குழப்பம் விளைவித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்று திரு. அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.

கெஅடிலான் கட்சியின் இளையர் கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தில் இருவர் காயமடைந்தனர்.

அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரம் தொடர்பான சட்டக் குழு நேற்றையக் குழப்பம் குறித்து விசாரித்து வருகிறது.

கெஅடிலான் கட்சியின் மாநாடு இன்றும் தொடர்கிறது. அதில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் முக்கிய உரையாற்றவிருக்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்