Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

2020 மே மாதவாக்கில் மலேசியப் பிரதமராக முடியும் : அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை

மலேசியாவின் ஆளுங்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் தாம் பிரதமராக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் ஆளுங்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் தாம் பிரதமராக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Bloomberg நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், டாக்டர் மகாதீர் முகமதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு வருவதில் சவால் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றார்.

இருப்பினும், பதவியேற்பு நாள் நெருங்கும்போது தற்போதைய சூழல் மாறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பக்கட்டான் ஹரப்பான் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் முகமது பிரதமரானார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் அந்தப் பொறுப்பைத் திரு. அன்வாரிடம் ஒப்படைக்கப்போவதாக அளித்த வாக்குறுதியைக் நிறைவேற்றப்போவதாக டாக்டர் மகாதீர் தொடர்ந்து கூறி வருகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்