Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

திரு. அன்வார் இப்ராஹிம், அரச மன்னிப்பு வழங்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் திரு. அன்வார் இப்ராஹிம் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
திரு. அன்வார் இப்ராஹிம், அரச மன்னிப்பு வழங்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை

(படம்: AFP)

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் திரு. அன்வார் இப்ராஹிம் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய மாமன்னர் அவருக்கு மன்னிப்பு வழங்கியது, அவரின் விடுதலைக்கு வழிவகுத்துள்ளது.

விடுதலை பெற்ற பிறகு அரண்மனைக்கு வருமாறு திரு. அன்வாருக்கு மாமன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்தச் சந்திப்பு பிற்பகல் பன்னிரண்டரை மணிக்கு நடைபெறும் எனக் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.

திரு. அன்வார், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை தேறிவந்த மருத்துவமனைக்கு வெளியில் திரு. அஸ்மின் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

திரு அன்வாருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்த குழு, இன்று காலை சந்தித்தது.

அரச மன்னிப்பு, திரு. அன்வார் அரசியலுக்கு மீண்டும் திரும்ப வழிவகுக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்