தென்கிழக்காசிய நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு இந்தோனேசிய அதிபர் அழைப்பு
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), தென்கிழக்காசிய நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), தென்கிழக்காசிய நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வருடாந்திர ஆசியான் உச்சநிலைச் சந்திப்பில் அவர் அந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்தோனேசியா முன்வைத்த ஆசியான் சிறப்புப் பயண ஏற்பாட்டுக்கான கட்டமைப்பு செயல்படுத்தப்பட வேண்டும் எனத் திரு. விடோடோ கேட்டுக்கொண்டார்.
இந்த வட்டாரத்தில் பொருளியல்களை மீண்டும் முடுக்கிவிட, மக்களின் எல்லைகடந்த நடமாட்டம் அவசியம் என்பதை இந்தோனேசிய அதிபர் வலியுறுத்தினார்.