Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் வழக்கு அடுத்த வாரம் தொடங்கும்

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியின் வழக்கு அடுத்த வாரம் தொடங்கும்.

வாசிப்புநேரம் -
மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் வழக்கு அடுத்த வாரம் தொடங்கும்

(படம்: AFP/Handout)

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியின் வழக்கு அடுத்த வாரம் தொடங்கும்.

அவரின் வழக்கறிஞர் AFP செய்தி நிறுவனத்திடம் அதனைத் தெரிவித்துள்ளார்.

திருவாட்டி சூச்சிக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு தேர்தல் பிரசாரங்களின்போது கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியது, உரிமம் பெறாத walkie-talkie கருவிகளைக் வைத்திருந்தது-ஆகியவை அவற்றுள் சில.

அடுத்த திங்கட்கிழமை முதல் வாதியிடமிருந்தும் சாட்சிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளது.

தலைநகர் நேப்பிடாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திருவாட்டி சூச்சியைச் சந்தித்த பிறகு அவர் வழக்கறிஞர் அதனைத் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்