Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷில் விரைவுப்படகு விபத்து - 26 பேர் மரணம்

பங்களாதேஷில் விரைவுப்படகு விபத்து - 26 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

பங்களாதேஷில் விரைவுப்படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 26 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பத்மா ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்தப் படகு சரக்குக் கப்பல் ஒன்று மீது மோதியது.

படகில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு மாவா என்னும் இடத்தில் இருந்து புறப்பட்டு சிப்ச்சர் நகருக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை 26 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்குக் கிராம மக்கள் பலரும் உதவி வருகின்றனர்.

பங்களாதேஷில் கடந்த மாதம் சுமார் 50 பயணிகளுடன் ஆற்றில் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 30-க்கும் அதிகமானோர் மாண்டனர்.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்