பங்களாதேஷ்: COVID-19 கிருமிப் பாதிப்புக்கு ஆளானோரைத் தனிமைப்படுத்தும் பிரிவில் தீ - ஐவர் மரணம்
பங்களாதேஷ் மருத்துவமனையில், கிருமிப் பாதிப்புக்கு ஆளானோரைத் தனிமைப்படுத்தும் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் மாண்டனர்.
பங்களாதேஷ் மருத்துவமனையில், கிருமிப் பாதிப்புக்கு ஆளானோரைத் தனிமைப்படுத்தும் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் மாண்டனர்.
டாக்காவின் குல்ஷன் வட்டாரத்தில் தீ மூண்டதாக அதிகாரிகள் கூறினர். மருத்துவமனைக்குச் சொந்தமான கூடத்தில் குளிரூட்டும் சாதனம் வெடித்ததால் நெருப்பு பரவியது.
மூச்சுத் திணறல் காரணமாகவே ஐவரும் மாண்டதாகத் தெரியவந்துள்ளது. பங்களாதேஷில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அண்மை வாரங்களாக, பங்களாதேஷில் கிருமிப் பரவல் மோசமடைந்துள்ளது. அங்கு சுமார் 38,000பேர் கிருமித்தொற்றால் அவதிப்படுகின்றனர். 500க்கும் அதிகமானோர் மாண்டனர்.