ஹஜ்ஜுப் பெருநாளுக்கு வீடு திரும்ப, ரயில்களில் குதிக்கும் ஆடவர்கள்
நேரத்தோடு வீடு செல்ல அவர்கள் எதையும் செய்ய தயார், ஓடும் ரயிலின்மீது ஏறவும் துணிந்து வீட்டனர் அவர்கள்.
ரயில் நிலையத்தில் எங்கும் கூட்டங்கூட்டமாக நிற்கும் ஆடவர்கள். அவர்கள் அனைவருக்கும் இலக்கு ஒன்றே. ஹஜ்ஜுப் பெருநாளைக் குடும்பத்தாருடன் கொண்டாட வேண்டும். நேரத்தோடு வீடு செல்ல அவர்கள் எதையும் செய்ய தயார், ஓடும் ரயிலின்மீது ஏறவும் துணிந்து வீட்டனர் அவர்கள்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று டாக்கா நகரில் உள்ள ரயில் நிலையங்களில் இதுவே காட்சி. கூரைகளிலும் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்த வண்ணம், ரயில்கள் நிலையங்களை விட்டுப் புறப்பட்டன.
சிலர் ரயில்கள் பாலங்களைக் கடக்கும் வேளையில் ரயில்களின் மீது குதித்தனர்.
நகர்ப் புறங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பங்களாதேஷியர்கள் பண்டிகைக் காலங்களைக் குடும்பத்தோடு செலவிடுதற்கு சொந்த கிராமங்களுக்குச் செல்கின்றனர்.