சீனா: சன்னல் கம்பியில் தலை மாட்டி அந்தரத்தில் தொங்கிய சிறுவன்
சீனாவில் நான்கு மாடி உயரத்திலிருந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
சீனாவில் நான்கு மாடி உயரத்திலிருந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
அந்த நான்கு வயதுச் சிறுவனின் தலை சன்னல் கம்பிகளில் மாட்டிக் கொண்டிருந்தது.
கிழக்கு சீனாவின் ஷங்டோங் வட்டாரத்திலுள்ள லின்யி நகரில் அந்தச் சம்பவம் நடந்தது.
சிறுவன் சன்னலுக்கு வெளியே ஏறிக்கொண்டிருந்தான். பாதியில் தவறிக் கீழே விழுந்தபோது தலை கம்பிகளுக்கிடையில் மாட்டிக்கொண்டது.
சிறுவனின் தாத்தா அந்த நேரம் தூங்கிக் கொண்டிருநதார். சிறுவனின் அழுகுரல் கேட்டுப் பதறியடித்துக் கொண்டு எழுந்து வந்தார்.
விரைந்து தீயணைப்பாளர்களை அவர் அழைத்ததும் அவர்களும் சிறிது நேரத்தில் சம்பவ இடத்தை அடைந்தனர்.
சிறுவனின் பெற்றோர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை.
சிறுவன் கீழே விழுந்தால் என்னாவது என்று அக்கம்பக்கத்தினர் கீழே மெத்தையைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
மீட்புப் பணியாளர்கள் சன்னல் கம்பி இடைவெளியை அகலமாக்கி சிறுவனின் தலையை மீட்டதாக CCTV தெரிவித்தது.