இந்தியா: மூளை தொடர்பான நோயால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் மூளை தொடர்பான ஒருவகை நோயால் கடந்த இரண்டு வாரங்களில் 100க்கும் அதிகமான குழந்தைகள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் மூளை தொடர்பான ஒருவகை நோயால் கடந்த இரண்டு வாரங்களில் 100க்கும் அதிகமான குழந்தைகள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க்குக் காரணம் லைச்சி பழத்தில் இருக்கும் ஒரு பொருள் நஞ்சாக மாறியிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
முசாஃபர்புர் (Muzaffarpur) நகரிலுள்ள ஆகப் பெரிய அரசாங்க மருத்துவமனையில் 85 குழந்தைகளும், தனியார் மருத்துவமனைகளில் எஞ்சிய குழந்தைகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்ட குழந்தைகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று குறைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
இதேபோல 2014-இல் நடந்த சம்பவத்தில் 150 குழந்தைகள் மாண்டன.
முசாஃபர்புர் வட்டாரம் லைச்சி பழ விளைச்சலுக்குப் பிரபலமானது.
லைச்சி பழங்கள் பழுக்கும் காலத்தில் இத்தகைய குழந்தை மரணங்கள் பங்களாதேஷ், வியட்நாமிலும்கூட நேர்கின்றன.
தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பத்தால் பீகார் மாநிலத்தில் மட்டும் 78 பேர் மாண்டுவிட்டனர்.