முன்னாள் காதலர்களுடன் திருமணத்தைக் கொண்டாடிய மணமகள்
காதலில் தோல்வியைத் தழுவும் சிலர், காதலர்களை விட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றுவிடுவர்.
காதலில் தோல்வியைத் தழுவும் சிலர், காதலர்களை விட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றுவிடுவர்.
தாய்லந்தில் ஒரு பெண், தம் முன்னாள் காதலர்கள் மூவரைத் தம் திருமணத்துக்கு அழைத்திருந்தார்.
மணப்பெண்ணின் முடிவு இணையத்தில் பலரிடையே கருத்துகளை ஈர்த்துள்ளது. மணமகள் Sine, அவரின் கணவர் Pub, முன்னாள் காதலர்கள் மூவருடன் சேர்ந்து மேடையில் நின்று எடுத்த படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
முன்னாள் காதலர்களைத் திருமணத்திற்கு அழைக்கும் முன்னர், தம் கணவரின் ஒப்புதலைக் கேட்டதாகக் கூறினார் Sine.
காதலர்களுடன் உறவு முறிந்தாலும் அவர்களுடன் நட்பாக இருப்பதாய் Facebook பதிவில் கூறினார் அவர்.
திருமண தினத்தன்று தம் கணவர், முன்னாள் காதலர்களை முதல்முறை சந்தித்ததாகக் கூறினார் அவர்.
சுமார் 12,000 முறை பகிரப்பட்ட Facebook பதிவை சிலர் வரவேற்றனர், சிலர் எதிர்த்தனர்.
முன்னாள் காதலர்களுடன் எடுத்த படத்தில் மணமகனின் முகத்தில் புன்னகை தெரியவில்லை என்று ஒருவர் கருத்துரைத்தார். அதற்கு மணப்பெண் அவருக்கு உடல்நலம் சரியில்லாததைக் காரணமாகச் சுட்டினார்.