இந்தியா: பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் 17 பேர் பலி
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு பேருந்தும் வேனும் (van) மோதிக்கொண்ட விபத்தில், குறைந்தது 17 பேர் மாண்டனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு பேருந்தும் வேனும் (van) மோதிக்கொண்ட விபத்தில், குறைந்தது 17 பேர் மாண்டனர்.
18 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
விபத்து நேற்றிரவு கான்பூர் நகரில் நேர்ந்தது.
பிற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருந்த வேனுடன் மோதியது.
அந்த வேனிலும் தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் இருந்தனர்.
மாண்டோரில் பெரும்பாலோர் வேனில் இருந்தவர்கள்.
சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார்.
மாண்டோரின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும் (சுமார் 3,700 வெள்ளி) காயமுற்றோரின் குடும்பத்துக்கு 50,000 ரூபாயும் (சுமார் 900 வெள்ளி) வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.