விமானப் பயணிகளை ஏளனம் செய்த சிப்பந்தி
தென்கொரியாவைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானப் பயணிகளைப் படமெடுத்து ஏளனம் செய்ததன் தொடர்பில் அந்நிறுவனம் பெரிய பிரச்சியனையில் சிக்கியுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானப் பயணிகளைப் படமெடுத்து ஏளனம் செய்ததன் தொடர்பில் அந்நிறுவனம் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது.
'ஏர் பூசான்' விமானச் சிப்பந்தி ஒருவர் விமானத்தின் பின்புறத்திலிருந்து பயணிகளைப் படமெடுத்து அப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார்.
பயணிகளின் சுருள்சுருளான கூந்தல் அரிசிப் பணியாரத்தைப் போல் இருப்பதாகவும் அவர் படத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து நிறுவனம் சிப்பந்தியை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறது.
சிப்பந்தியின் பொருத்தமற்ற நடத்தையைக் கண்டிக்கும் விதத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் 'ஏர் பூசான்' விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.