கம்போடியாவில் COVID-19 நோயாளிகளுக்கான இடமாக மாறியிருக்கும் திருமண மண்டபங்கள்
கம்போடியாவில் உள்ள 2 திருமண மண்டபங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவமனைப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்போடியாவில் உள்ள 2 திருமண மண்டபங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவமனைப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை, அதிகரித்துவரும் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப் பயன்படுத்தப்படவுள்ளன.
அங்கு நேற்று ஒரே நாளில் 618 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தகவல் அளித்தது.
கடந்த இரு மாதங்களில் அங்கு மொத்தம் 6,389 பேர் கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 43 பேர் மாண்டனர்.
அந்நாட்டில் தற்போது முடக்கம் நடப்பில் உள்ளது. பெரும்பாலானோர் இருவாரங்களுக்கு வேலைக்குச் செல்வது, உணவு வாங்குவது, மருத்துவ சிகிச்சை பெறுவது ஆகியவற்றைத் தவிர, வேறு எதற்காகவும் வெளியில் செல்ல முடியாது.