Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: தனிமைப்படுத்தப்பட்ட தந்தை; கவனிப்பார் இன்றி இறந்துபோன சிறுவன்

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன், அவனது தந்தை தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இறந்துபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சீனா: தனிமைப்படுத்தப்பட்ட தந்தை; கவனிப்பார் இன்றி இறந்துபோன சிறுவன்

(படம்: AFP)

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன், அவனது தந்தை தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இறந்துபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனையடுத்து, தந்தையைத் தனிமைப்படுத்திய இரு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவனைப் பார்த்துக்கொள்ள வேறு எவரும் இல்லை. தந்தை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்தில் கவனிப்பார் இன்றி, சிறுவன் மரணமடைந்தான்.

யான் என்ற பெயர் கொண்ட அந்தச் சிறுவனைப் பற்றிய செய்தி இணையவாசிகளிடையே கோபத்தைக் கிளப்பியது.

சூழலுக்கு ஏற்ப, நடைமுறையைப் புரிந்துகொண்டு அதிகாரிகள் முடிவெடுத்திருக்க வேண்டும் என்று நன்னடத்தை மேற்பார்வைக்கான சீனாவின் மத்திய ஆணையம் கண்டித்தது.

கொரோனா கிருமித் தொற்று பரவிவரும் சூழலில் பணியைச் சரிவரச் செய்யாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாய் ஆணையம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்