Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: அரை மில்லியன் அளவு COVID-19 தடுப்புமருந்தைப் பிலிப்பீன்ஸுக்கு வழங்க உறுதி

சீனா, அரை மில்லியன் அளவு COVID-19 தடுப்புமருந்தை பிலிப்பீன்ஸுக்கு வழங்க உறுதியளித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சீனா, அரை மில்லியன் அளவு COVID-19 தடுப்புமருந்தை பிலிப்பீன்ஸுக்கு வழங்க உறுதியளித்துள்ளது.

கிருமிப்பரவலில் இருந்து மீண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தமது ஒருவாரத் தென்கிழக்காசியப் பயணத்தை முடித்துக்கொள்வதற்கு முன்னதாக பிலிப்பீன்ஸின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார்.

COVID-19 நோயை எதிர்த்துப் போராட, பிலிப்பீன்ஸ் மக்களுக்குச் சீனா தோள்கொடுக்கத் தயார் என அவர் கூறினார்.

சீனாவின் Sinovac மருந்தாக்க நிறுவனத்திடமிருந்து, சோதனை நிலையில் உள்ள, 25 மில்லியன் அளவு தடுப்புமருந்தை பிலிப்பீன்ஸ் வாங்கியுள்ளது.

அதில் 50ஆயிரம் தடுப்பூசிகள், முதற்கட்டமாக அடுத்த மாதம் மணிலா (Manila) சென்றடையும்.

வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இருநாடுகளும் கடப்பாடு தெரிவித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்