விக்ரம் ஆய்வுக் கலத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் நம்பிக்கையை ஆய்வாளர்கள் இழக்கக்கூடாது - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர்
சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் ஆய்வுக் கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்கள் இழந்து விடக்கூடாது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் K.சிவன் தெரிவித்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் ஆய்வுக் கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்கள் இழந்து விடக்கூடாது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் K.சிவன் தெரிவித்துள்ளார்.
இன்னும் 14 நாள்களுக்கு விக்ரம் ஆய்வுக் கலத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றார் திரு. சிவன்.
Doordarshan செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் ஆய்வுக் கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதிக் கட்டத்தில் தவறான செயல்பாடே தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கு காரணம் என்றார் டாக்டர் சிவன்.