இந்தியாவின் சந்திரயான்-2 விண்கல முயற்சி தோல்வியா வெற்றியா? - இணையவாசிகளிடையே சர்ச்சை
இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை நெருங்கியபோது பூமியுனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை நெருங்கியபோது பூமியுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது குறித்து இணையவாசிகளிடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நிலவில் மனிதன் கால்பதித்ததிலிருந்து விண்வெளி ஆராய்ச்சி முன்னேற்றத்தைக் கண்டறிய முயன்ற இந்தியாவைச் சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டினர். அதுவொரு வெற்றிகரமான முயற்சி என்று அவர்கள் கருதினர்.
அதே சமயத்தில், இந்தியாவின் முயற்சியைக் கேலி செய்யும் வகையிலும் பல பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பாகிஸ்தானியர்கள் எழுதியிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.