சீனா: தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் மீட்பு
சீனாவின் ஷங்காய் நகரில் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர்ச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சீனாவின் ஷங்காய் நகரில் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர்ச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சாங்னிங் வட்டாரத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் சம்பவம் நடந்ததாகச் சீன நெருக்கடிகால நிர்வாக அமைச்சின் தீயணைப்புப் பிரிவு கூறியது.
தேடல், மீட்புப் பணிகளை மேற்கொள்ள சுமார் 150 அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது.
அப்பகுதியில் இருந்த ஊழியர்களுடன் வாகனங்களும் இடிபாடுகளில் புதையுண்டன.
அந்தக் கட்டடத்தில் Mercedes-Benz கார்கள் விற்கப்பட்டன.
சம்பவத்தில் யாரும் மாண்டதாகத் தகவல் இல்லை.
மீட்கப்பட்டவர்களில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.