சீனா: பள்ளிப் பேருந்து ஏரி ஒன்றில் விழுந்ததில் 21 பேர் பலி
சீனா: பள்ளிப் பேருந்து ஏரி ஒன்றில் விழுந்ததில் 21 பேர் பலி
தென்மேற்குச் சீனாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஏரி ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 மாணவர்கள் மாண்டனர் .
15 பேர் காயமுற்றனர்.
மாணவர்கள் வருடாந்தரக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளை எழுதச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பேருந்து, கம்பியை மோதி ஹொங்ஷான் ஏரியில் விழுந்ததாக உள்ளூர் அவசரகால நிர்வாகத்துறை தெரிவித்தது.
CCTV கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காணொளி, பேருந்து ஐந்து தடங்களைக் கடந்து, எதிரில்வரும் போக்குவரத்தையும் தாண்டிச் செல்வதைக் காட்டியது.
சாலையின் மறுபக்கத்தில் தடுப்புகளை இடித்துப் பேருந்து ஏரியில் விழுவதும் பதிவாகியுள்ளது.
காயமுற்றவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணத்தை அறிய உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.